கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* மாணவர்களின் சேர்க்கையின் போது எவ்விதமான படிவத்துக்கும் கட்டணங்கள் வசூலிக்க கூடாது.
* மாணவர் சேர்க்கை அரசு விதிகளின்படி செயல்பட வேண்டும்.
* எவ்வித நிபந்தனைகளின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையினை திட்டவட்டமாக நிறுத்துதல் கூடாது.
* மாற்று சான்றிதழ்கள் (டி.சி.) மாணவர்களுக்கு வழங்கும்போது எந்தவித புகார்களுக்கும் இடமின்றி செயல்பட வேண்டும்.
* இந்த அறிவுரைகளை தவறாமல் அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் புதிய கல்வி ஆண்டில் பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்தும், கல்வித்துறை சார்ந்த பணிகள் என்ன? என்பது குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக இன்று (புதன்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் இந்த கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.