யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், யூரோ கால்பந்து தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார்
பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வந்த உடன் தனக்கான இருக்கையில் அமர்ந்த ரொனால்டோ தன் முன்னாள் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக்க கோலா குளிர்பான பாட்டில்களை பார்த்தார்.
உடனடியாக அந்த இரண்டு கோக்க கோலா பாட்டில்களையும் எடுத்த ரோனால்டோ அதை மேஜையை விட்டு அகற்றி கீழே வைத்தார். மேலும், தனக்கு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ’தண்ணீர் குடியுங்கள்’ என்று கூறினார்.
இந்த நிகழ்வு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. கோக்க கோலா குளிர்பானத்தை அகற்றிவிட்டு ‘தண்ணீர் குடியுங்கள்’ என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவுறுத்திய சில நிமிடங்களில் கோக்க கோலாவின் சந்தை மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது.
ரொனால்டோவின் ஒற்றை வார்த்தையால் கோக்க கோலா நிறுவனம் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.