நாட்டில் கொரோனா பாதிப்புகளால் கடந்த மார்ச்சில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்பின்னர் ஆன்லைன் வழி கல்விக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களின் விருப்பத்தின்பேரில் பள்ளிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், சில மாநிலங்களில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே, எண்ணற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்புகள் தென்பட்டு உள்ளன. இதனால் அந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்புகளின் 2-வது அலை ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
இதனை கவனத்தில் கொண்டு ஒடிசாவில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளி கூடங்களையும் வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை மூடுவது என அரசு முடிவு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஆனால், தேர்வுகள் நடத்துவதற்கும் (பாட தேர்வு, போட்டி தேர்வு மற்றும் நுழைவு தேர்வு), மற்றும் பிற நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வி தொடர அனுமதி அளிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்துள்ள சுகாதார செயல்பாட்டு வழிமுறைகளின்படி, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அல்லது அது தொடர்புடைய பணிகளுக்காக செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.