1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கூந்தலுக்கு பராமரிக்க 50 எளிய குறிப்புகள்

 கூந்தலுக்கு பராமரிக்க 50 எளிய குறிப்புகள்


1. கடலை மாவு, எலுமிச்சைச்சாறு, வெந்தயத்தூள் மூன்றும் தலா 1 டீஸ்பூன் கலந்து தலையில் தேய்த்துக் குளிக்கவும். சிலருக்கு தலைக்குக் குளித்தாலே கூந்தலில் உள்ள ஈரப்பதம் எல்லாம் நீங்கி வறண்டு, முடியெல்லாம் பறக்கும். இந்த சிகிச்சை அப்படி மண்டைப் பகுதியில் உள்ள எண்ணெய் பசையை முற்றிலும் நீக்காமல்,  தேவையான எண்ணெய் பசையை விட்டு, சரியான அளவு எண்ணெய் பதத்தைத் தக்க வைக்கும் கண்டிஷன் செய்யும்.


2. கொட்டை நீக்கிய பூங்கக்காய் தோலுடன், 2 டீஸ்பூன் பயத்தம் பருப்பை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து அரைத்து தலையை அலசவும். வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால் அதிகப்படியான எண்ணெய் பசையால் அழுக்காகி, முடி உதிராமல் காக்கும்.


3. முட்டையின் வெள்ளைக்கருவுடன்  1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்,1 டீஸ்பூன் சீயக்காய்த்தூள் கலந்து நன்றாக அடித்து தலையில் தேய்த்து குளிக்கவும். இது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும். புரதச்சத்து, எண்ணெய் பசை, சுத்திகரிக்கும் பொருட்களின் கலவை இருப்பதால் அடர்த்தி அதிகரிக்கும்.


4. செம்பருத்தி இலை 10 எடுத்துக் கொள்ளவும். 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, இந்த இலையை தண்ணீரில் போடவும்.1 மணி நேரம் கழித்து 2 டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து தலையை அலசவும். வறண்ட கூந்தல் பிரச்னையை சரியாக்கி, கூந்தல் உடையாமல் நீளமாக வளர உதவும்.


5. ஒரு பட்டை சோற்றுக்கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல்லியை மிக்சியில் அடித்து  நீராக்கவும், இதில் சிறிது வெந்தயத் தூள்  சேர்த்து கூந்தலை அலசவும். இது முடியை கருப்பாக்கும். செம்பட்டை நீங்கும்,


6. தேங்காய்ப்பால் 1/4 கப் எடுத்து தேங்காய் எண்ணெய் தடவுவது போல் தடவி தலையை சீப்பால் வாரி விடவும். 1/2 மணி நேரம் ஊறிய பின் வெதுவெதுப்பான நீரில் 1/2 மூடி எலுமிச்சைச்சாறு கலந்து தலையை அலசவும். அப்படியே ஒரு நாள் விடவும். மறுநாள் முடி பள பளப்பாகும். பிசுபிசுப்பாக தெரியாது.


7. வெந்தயம் - 1 டீஸ்பூன், துவரம்பருப்பு - 1 டீஸ்பூன், மிளகு - 10 அனைத்தையும் முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் மிக்சியில் அடித்து, வடிகட்டி தலையில் தேய்த்து அலசவும். இதுவும் கூந்தல் அடர்த்திக்கு உதவும்.


8. இரண்டு செம்பருத்தி இலை, 10 மருதாணி இலை, 2 டீஸ்பூன் பயத்தம் பருப்பு அனைத்தையும் அரைத்து தலையில் பேக் போட்டு 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இது கூந்தலின் பிசுபிசுப்பு, அழுக்கை எல்லாம் நீக்கி, மிருதுவாக, அடர்த்தியாக மாற்றும்


9. 2 டீஸ்பூன் தயிருடன், 1 டீஸ்பூன் வெந்தயத்தூள் கலந்து வாரம் 2 முறை தலையில் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும். கூந்தல் உதிர்வது நிற்கும்.


10. சாதம் வடித்த கஞ்சியுடன், கடலை மாவு கலந்து தலையை அலசவும். கூந்தல் பட்டு போல மாறுவதை உணர்வீர்கள்.


11. தினமும் 10 வேர்க்கடலையை உண்ணும் பழக்கத்தை வைத்துக் கொள்வது முன் வழுக்கையை தவிர்க்கும்.


12. 1 டீஸ்பூன் ஓமத்தை, 200 மி.லி. தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரை அருந்துவது, பொடுகு பிரச்னைக்கு  மூலகாரணமான அசிடிட்டியை எடுக்கும். கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும்.


13. தினமும் 1 கீரை, குறிப்பாக  வாரம் இரண்டு முறை முருங்கைக்கீரை உண்பதை வழக்கமாக எடுத்துக் கொண்டால் ரத்த சோகையால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். இளநரையையும் தவிர்க்கலாம்.


14. பெரிய நெல்லிக்காய் ஒன்று தினமும் சாப்பிட்டு வந்தால் முடி கருகருவென்று வளரும்.


15. வாரத்தில் 3 நாட்கள் தேன், தினை மாவு, வெல்லம் இவற்றை உண்டு வருபவர்களுக்கு தலைமுடி பிரச்னை வராது. நரை இன்றி, கருப்பான கூந்தலும் வளரும்.


16. கருஞ்சீரகம், நெல்லிமுள்ளி சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் 1/2 டீஸ்பூன் அளவு காலையில் எடுத்துக் கொள்வது கருகருவென்று முடி வளர்ச்சியைத் தூண்டிவிடும்.


17. நான்கு பாதாம்பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் மேல் தோலெடுத்து அதை அப்படியே சாப்பிடுவது புரதச்சத்து குறைவைத் தடுக்கும்.  முடி மெலிதாவதை தடுக்கும்.


18. பப்பாளிப்பழ துண்டுகள் - 4, சப்போட்டா துண்டு- 4, ஆப்பிள்- 4, இவற்றை பழமாக அப்படியே உண்பதை தினசரி வழக்கமாகக்  கொள்ளவும். இவற்றில் நார்ச்சத்துடன்  வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் கிடைப்பதால் தலை நடுவே வழுக்கை விழ ஆரம்பிப்பதைத் தடுக்கும்.


19. தினமும் இரவில் பால் அருந்துவது அவசியம். இதிலுள்ள கால்சியம் மற்றும் புரதம் இரண்டும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியம். பொடுகு தொல்லை வராமலும் தடுக்கும்.


20. அத்திப்பழம், மாம்பழம், தேன்  மூன்றையும் ஒரு லேகியமாக கலந்து, தினமும் 1 டீஸ்பூன் சாப்பிடுவது  ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். முடி மெலிவது, நரைப்பது சரியாகும்.


21. கரிசலாங்கண்ணி கீரை 1 கப் எடுத்து, 50 மி.லி. தேங்காய் எண்ணெயில் கலந்து தைலம் தயாரித்து, வாரம் 1 முறை ஹாட் ஆயில் மசாஜ் செய்து வரவும். பிறகு கடலை மாவு, சீயக்காய் மாதிரி ஏதேனும் உபயோகித்து கூந்தலை அலசலாம். இதே எண்ணெயை தினசரி தலைக்கும் தேய்க்கலாம். கருகரு கூந்தலுக்கும், வளர்ச்சிக்கும் உதவக்கூடியது இந்த சிகிச்சை.


22. ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயை  உச்சந்தலையில் வைத்து நன்றாக தேய்த்து 1 மணி நேரம் ஆன பின் கடலைமாவு தேய்த்து தலையை அலசவும். வாரம் 2 முறை இப்படிச் செய்யவும். உஷ்ணத்தால் கூந்தல் வளராதவர்களுக்கு  இது குளிர்ச்சியைக் கொடுத்து, வளர்ச்சியை அதிகரிக்கும்.


23. பத்து வேப்பந்தளிரை, 10 மிளகு சேர்த்து கால் கப் நல்லெண்ணெயில் சேர்த்துத் தைலம் காய்ச்சவும். இதை தலையில் தேய்த்து நன்றாக வாரவும். பிறகு வெந்நீரில் டவலை நனைத்து நன்றாக பிழிந்து தலையில் ஒற்றி எடுக்கவும். இது தலைமுடியை நன்கு வளரச் செய்யும்.


24. ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன் மூன்றையும் தனித்தனியாக சூடு செய்து தனித்தனியே 3 காட்டன் பட்ஸ் வைத்து தலையில் நன்றாக தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து சீயக்காய் கொண்டு தலையை அலசவும். இளநரையைத் தவிர்க்கும். வழுக்கை வராமல் காக்கும். அடர்த்தியான கூந்தலுக்கும் உதவும்.


25. லவங்கம் - 4, கரிசலாங்கண்ணி கீரை - 1/2 கப், கீழாநெல்லிக் கீரை - 1/2 கப், வெந்தயக்கீரை - 1 பிடி ஆகியவற்றைக் கொண்டு  தைலம் தயாரிக்கவும். இதை உபயோகித்து மசாஜ் செய்து குளித்து வருவது முன்வழுக்கை, புழு வெட்டு முதலிய பிரச்னைகளை தவிர்க்கும்.


26. ஒரு கப் தேங்காய்த் துருவலை நன்றாக அரைத்து கடாயில் போட்டு கொதிக்க விடவும். அதிலிருந்து பிரியும் தேங்காய் எண்ணெயை கொண்டு தினமும் தலைக்குத் தடவி வருவது முடிவளர்ச்சியை அதிகரிக்கும்.


27. நான்கு சின்ன வெங்காயத்தை அரைத்து வடிகட்டவும். முன் நெற்றி வழுக்கை வரும் அடையாளம் இருப்பவர்கள், வாரம் 1 முறை வெங்காயச் சாற்றை தலையில் தேய்த்து, வெந்தயத்தூள் கொண்டு அலசவும்.


28. சுருள் பட்டை, வெந்தயம், மிளகு இவை மூன்றையும் சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் வைக்கவும். நன்றாக ஊறியதும் தலையில் தேய்த்து வந்தால், தலைமுடி உதிர்வது நிற்கும்.


29. ஒரு டீஸ்பூன் ஓமம் எடுத்து வறுத்து நன்றாக பொடி செய்யவும். தலைமுடியை அலசும் போது இந்த பொடியை உச்சந்தலையில் தேய்த்து சிறிது தண்ணீர் விட்டு அலசவும். தலையில் நீர் கோர்த்து அவதிப்படுவோருக்கு தண்ணீரை எடுக்கும். அசிடிட்டியால் முடி  உதிர்வது, பொடுகு வருவது போன்றவை சரியாகும்.


30. இளநீரில் உள்ள வழுக்கையை அரைத்து தலையில் தேய்த்து தலையை அலசுவது முடி

வறட்சியைத் தடுக்கும்.


31. கடுக்காய் - 100 கிராம், ஓமம் - 50 கிராம், நெல்லிமுள்ளி - 50 கிராம், கருஞ்சீரகம் - 50 கிராம் இவற்றை ஒன்றிரண்டாக பொடித்து 300 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் வைத்து எடுக்கவும். எண்ணெய் கருமையாக மாறும். இதை தினமும் தடவி வரும்போது நரைமுடி சிறிது சிறிதாக நிறம் மாறும்.


32. 50 கிராம் அதிமதுரத்துடன் 50 கிராம் தேங்காய்ப் பால் கலந்து ஊறவைக்கவும். மறுநாள் நன்கு அரைத்து கிரீமாக செய்து, தலையில் தேய்த்து 2 மணி நேரம் ஊறவிடவும். இது வழுக்கையில் முடி வளரும் வாய்ப்பை 75 சத

விகிதம் அதிகரிக்கும்.


33. செம்பருத்திப் பூ, மகரந்தத்தை சேர்த்து 50 கிராம் அளவு எடுத்து வழுக்கையில் உள்ள இடத்தில் தேய்த்து அப்படியே விட்டுவிடவும். ஒரு நாள் முழுவதும் இருக்கும்போது வழுக்கை பிரச்னை மெல்ல மாறி, முடி வளரத் தொடங்கும்.


34. பூக்கள் மனஅழுத்தத்தை குறைக்கும். இவற்றை தைலம் தயாரித்து தினமும் தேய்த்து குளிப்பதும், தடவி கொள்வதும், மனஅழுத்தத்தினைக் குறைத்து முடி உதிர்வதைத் தவிர்க்கும். மரிக்கொழுந்து, ரோஜா, செண்பகப்பூ, சம்பங்கி, ஆவாரம் பூ, தாமரை என எதையும் உபயோகிக்கலாம். மல்லியை மட்டும் தவிர்க்கவும்.


35. 100 கிராம் வேப்பங்கொட்டையை ஒன்றிரண்டாக உடைத்து இறுக்கமாக மூடி வைக்கவும். 100 மி.லி. நல்லெண்ணெயை நன்றாக காய்ச்சி அதில் விடவும். 15 நாட்கள் வெயில்படாத இடத்தில் வைக்கவும். 15 நாட்கள் கழித்து வேப்ப எண்ணெய் மேலே வந்திருக்கும். 1/2 டீஸ்பூன்  வேப்பெண்ணெயுடன், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி தலையில் நன்றாக தேய்த்து வரும்போது பேன், ஈறு பிரச்னை மாயமாகும்.


36. ஒரு டீஸ்பூன் வெந்தயத்துடன், ஒரு டீஸ்புன் துவரம் பருப்பை நைசாக அரைத்து குளிக்கும் முன் தலையில் வேர் பகுதி வரை நன்கு பூசி தடவிக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிக்கும் போது தேய்த்து கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடியின் வேர்ப்பகுதியில் வறட்சி ஏற்படாமல் எப்போதும் குளிர்ச்சியாக வைத்து இருக்கும். இது முடி உதிர்வதை தடுப்பதுடன் மீண்டும் வளர ஆரம்பிக்கும். இது போல் வாரம் 3 நாள் செய்ய வேண்டும்.


37. நூறு கிராம் கருப்பு எள்ளை வெந்நீரில் ஊற வைக்கவும். இதை அரைத்து விழுதாக்கி தலையில் தேய்த்து மிதமான சூடுள்ள தண்ணீரில் அலசுவது, தலைமுடியை கருகருவென வளர செய்யும்.


38. கறிவேப்பிலை, மருதாணி, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இவை எல்லாம் தலா 1 பிடி எடுத்து நன்கு அரைத்து ஒரு கடாயில் மூழ்கும் வரை நல்லெண்ணெயுடன் சேர்த்து ஓசை அடங்கும் வரை காய்ச்சவும். கடைசியில் சிறிதளவு வெட்டி வேர் போட்டு இறக்கவும். தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். உடல்நலமின்றி, சத்துக்குறைபாடால் பாதிக்கப்பட்டோருக்கு தலைமுடி பலவீனமாகிறவர்களுக்கு இது மிகச் சிறந்த சிகிச்சை.


39. 3 டீஸ்பூன் தேங்காய்த்துருவலுடன், 3 டீஸ்பூன்  கசகசா சேர்த்து அரைத்து பால் எடுக்கவும். இத்துடன் கடலைமாவு 2 டீஸ்பூன் சேர்த்து தலையை அலசவும். இது பொடுகை விரட்டும். கூந்தலை மிருதுவாக்கும்.


40. வில்வ இலை - 4, துளசி - 4, செம்பருத்தி - 4 அனைத்தையும் அரைத்து சாறு எடுக்கவும். இதில் அரை டீஸ்பூன் புங்கங்காய்த்தூள் கலந்து தலையை அலசவும். மருந்துகள் எடுத்துக் கொள்வதால் கூந்தல் வளர்ச்சியில் ஏற்படுகிற பக்க விளைவுகளைத் தவிர்க்கும்.


41. சீயக்காய் அரை கிலோ, பயத்தம் பருப்பு கால் கிலோ, வெந்தயம் கால் கிலோ, பூலாங்கிழங்கு 100 கிராம் எல்லாவற்றையும் மெஷினில் கொடுத்து அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர, கூந்தல் வளர்ச்சி தூண்டப்படும். முரட்டுக்கூந்தல் மிருதுவாகும்.


42. உலர வைத்த ஒற்றை செம்பருத்திப்பூ 100 கிராம் எடுத்து 300 மி.லி. தேங்காய் எண்ணெயில் சேர்த்து குறைந்த தணலில் வைத்து ஓசை அடங்கும் வரை கொதிக்க விடவும். பிறகு 50 கிராம் வெட்டி வேர் துண்டு சேர்க்கவும் (இது எண்ணெயைத் தெளிவாக்கும்). இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.


43. ஆவாரம் பூ 50 கிராம், சுருள்பட்டை 50, பிஞ்சு கடுக்காய் 50, வெந்தயம் 50, மரிக்ெகாழுந்து 50  எல்லாவற்றையும் அரை கிலோ தேங்காய் எண்ணெயில் ஒன்றிரண்டாக உடைத்துப் போட்டு வெயிலில் காய வைக்கவும். இதை தலைக்குத் தேய்த்து வர, முடி தொடர்பான எல்லா பிரச்னைகளும் தீரும். முடி உதிர்வு நிற்கும். நன்கு வளரும்.


44. கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் அரைத்த விழுது 100 கிராம், வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை தலா 50 கிராம் - மூன்றையும் கலந்து கடாயில் போட்டு மூழ்கும் அளவு நல்லெண்ணெய் விடவும். காய்ச்சி தைலம் தயாரிக்கவும். 2 நாட்கள் கழித்து வடிகட்டி, தலையில் தேய்த்துக் குளிக்கவும். முடி வளர்ச்சிக்கு மிக உகந்தது.


45. ஓமம், மிளகு, கறிவேப்பிலை தலா 50 கிராம், கடுகு 10 கிராம் எல்லாவற்றையும் பொடித்து சேர்த்து ஒரு துணியில் கட்டவும். இதை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிடவும், கொதித்ததும் துணியில் கட்டிய மூட்டையை தண்ணீரில் சேர்க்கவும். டர்கி டவலை அதில் நனைத்து பிழிந்து தலையில் சுற்றி எடுத்தால் தலைவலி தலைபாரம் நிற்கும். கூந்தலுக்கும் ஆரோக்கியம் சேர்க்கும்.


46. கரிசலாங்கண்ணிச் சாறு, சோற்றுக் கற்றாழை ஜெல் இரண்டும் சம அளவு எடுத்து 2 மடங்கு தேங்காய் எண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். தைலம் பதம் வந்ததும் இறக்கவும். இதை தினமும் தலைக்குத் தடவினால் முடிப் பிளவு மற்றும் உதிர்வது சரியாகும்.


47. ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய்ப் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்­ணீரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டு வரவும். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும்.


48. வறண்ட கூந்தலுக்கு ஒரு சிகிச்சை பயத்தம் பருப்பு, வெந்தயம், செம்பருத்திப் பூ, பூலாங்கிழங்கு தலா 50 கிராம் எல்லாம் சேர்த்து அரைத்து சலித்து,  தலைக்குத் தேய்த்துக் குளிப்பது கூந்தல் வறட்சியைப் போக்கும். முடி மிருதுவாகும்.


49. எண்ணெய் பசைக் கூந்தலுக்கு ஒரு சிகிச்சை கடலைப்பருப்பு, வெட்டி வேர், செம்பருத்தி, பூலாங்கிழங்கு தலா 50 கிராம் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து உபயோகிப்பது அதீத எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.


50. சாதாரண கூந்தலுக்கு ஒரு சிகிச்சை தேங்காய்ப் பால் கால் கப், ஓமத்தூள், கடலை மாவு தலா 20 கிராம், வெந்தயத் தூள் 10 கிராம் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கண்டிஷனராக உபயோகிப்பது முடிக்கு நல்ல அடர்த்தியையும் வளர்ச்சியையும் தரும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags