1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் & மாணவர்களுக்கு மிதிவண்டிகள், மடிக்கணினிகள் வழங்கப்படும் - கல்வி அமைச்சர் திட்டவட்டம்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக் கான வகுப்புகள் ஆன்- லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.


இந்தநிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் நடைபெறுமா? மாணவர்களுக்கு இறுதித்தேர்வு எப்படி நடக்கும்? 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது

எந்தவித கல்வி நடவடிக்கைகளும் நடைபெறாத ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக கருதப்படும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்கப்படுமா? என்றெல்லாம்கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சில தெளிவுகளை தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் நேற்று மினி கிளினிக் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்டை மாநிலங்களில் பள்ளிகளை திறந்தவுடன் மீண்டும் மூடி இருக்கின்றனர். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு இருக்கிறது. அருகில் உள்ள மாநிலங்களில் நிலவும் சூழலை பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட்ட போதிலும், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயமாக நடக்கும். முதல்-அமைச்சருடன் ஆலோசித்து பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை வெளியிடப்படும்.

நடப்பு கல்வியாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்கப்படாது. அதற்கான வாய்ப்பு இல்லை.மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தாலும் மிதிவண்டிகள், மடிக்கணினிகள் வழங்கப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து திருவள்ளுவர் காவி உடை அணிந்ததுபோல கல்வி தொலைக்காட்சியில் வெளியான காட்சி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதுபற்றி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘பேராசிரியர் ஒருவரின் தவறால் அப்படி இடம்பெற்றுவிட்டது. தவறுக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது’ என்றார்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags