1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கன்னி ஆங்கில புத்தாண்டு 2021 பலன்!

கன்னி  ஆங்கில புத்தாண்டு 2021 பலன்! 


1.1.2021 முதல் 31.12.2021 வரை

தடைகள் அகன்றோடும்

(உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை)

(பெயரின் முதல் எழுத்துக்கள்: பா, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

கன்னி ராசி நேயர்களே! குருவின் பார்வையோடு பிறக்கும் இந்தப் புத்தாண்டு, உங்களுக்கு குதூகலத்தை தரும் ஆண்டாகவே அமையப்போகின்றது. அர்த்தாஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம குரு இரண்டும் விலகி விட்டது. எனவே, இனி உங்கள் எண்ணங் கள் பூர்த்தியாகும். முயற்சிகள் அனைத்தும் எளிதாக கைகூடும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலும். துணிந்து எடுத்த முடிவுகளால் துயரங்களை போக்கிக்கொள்வீர்கள். விவேகமாகச் செயல்பட்டு வெற்றிகளை வரவழைத்துக் கொள்ளும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாகவே இருக்கின்றன. வம்புகள் அகலும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிந்து மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில், இதுவரை இருந்த பிரச்சினை அகலும். இனி மன உறுதியோடு செயல்பட்டு நல்ல மாற்றங் களை வரவழைத்துக்கொள்வீர்கள்.

ஆண்டின் தொடக்கம் குருச்சந்திர யோகத்தோடும், நீச்சபங்க ராஜயோகத்தோடும் அமைகின்றது. சந்திரன், உங்கள் ராசிக்கு லாபாதிபதியாவார். அந்த லாப ஸ்தானத்தைக் குரு பார்த்து புனிதமடைய வைப்பதால் சேமிப்பு உயரும். கரைந்த பொருளாதாரத்தை நிறைவு செய்ய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். வீண் பழிகள் அகலும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். முகஸ்துதி பாடும் நண்பர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பொதுவாக இந்த ஆண்டு ஒரு திருப்பம் தரும் ஆண்டாக அமையும்.

புத்தாண்டின் தொடக்க நிலை

உங்கள் ராசிநாதன் புதன், பஞ்சம ஸ்தானத்தில் குரு மற்றும் சனியோடு இணைந்திருக்கின்றார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால், நன்மைகள் குறைவில்லாமல் கிடைக்கும். சனி 6-க்கு அதிபதியாகவும் இருப்பதால், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வரலாம். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும். மேலதிகாரிகளால் மறுக்கப்பட்ட சலுகைகள் இப்பொழுது கிடைக்கும். பிரபலமானவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பதால், நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட வகையில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். அதே நேரத்தில் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

விரயாதிபதியான சூரியன், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கின்றார். 4-ம் இடம் என்பது வீடு, வாகனம், தாய், சுகம், கல்வி ஆகியவற்றைக் குறிப்பதாகும். எனவே அவை சம்பந்தப்பட்ட வகையில் விரயங்கள் ஏற்படலாம். குறிப்பாக ‘இடம் வாங்கிப் போட்டும், நீண்டகாலமாக அதில் வீடு கட்ட முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதற்கான யோகம் வரும். கட்டிய வீட்டைப் பழுதுபார்த்தல், வீட்டை விரிவு செய்து கட்டுதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டும் நேரம் இது. ராகு-கேதுக்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. 9-ல் ராகு இருப்பதால் தந்தை வழி உறவில் திருப்தி ஏற்படாது. பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்துகொள்ளும் முயற்சியில், மூன்றாம் நபரின் தலையீடு அதிகரிக்கும். 3-ல் கேது இருப்பதால் பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையுமா? என்பது சந்தேகம்தான். பொறுமையும், நிதானமும் தேவை. மேலும் சர்ப்பக் கிரகங்களுக்குரிய வழிபாடுகளையும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களையும் செய்துகொள்வது அவசியமாகும். சுயஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களையும் வழிபடுங்கள்.

மகர குருவின் சஞ்சாரம்

ஆண்டின் தொடக்கத்தில், மகர ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம், நீச்சம் பெறுவது யோகம்தான். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ, பிள்ளைகளுக்கோ ‘விரும்பும் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதற்கான வாய்ப்பு உருவாகும். அதுமட்டுமல்லாமல் மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அகால நேரத்தில் உணவு உண்பது, உடல்நலத்திற்கு ஒவ் வாத உணவுகளை உட்கொள்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம். தாய்வழி ஆதரவு திருப்தி தரும்.

குரு, உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்திற்கும் அதிபதியானவர். எனவே கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். பெற்றோர்களின் மணி விழா மற்றும் பிறந்தநாள் விழாக்களை கொண்டாடி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். ஆதரவு தரும் நண்பர்களின் எண்ணிக்கையும் உயரும்.

குருவின் பார்வை பலன்கள்

புத்தாண்டில் மகரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ளும். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டு, தனித்து இயங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் மாறும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும். பங்காளிப் பகை முடிவுக்கு வரும். தாய் வழி உறவுகளின் ஒத்துழைப்போடு சில நல்ல காரியங்களை முடிப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் திருப்தி தரும். அடகுவைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வருவீர்கள். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர்.

கும்ப குருவின் சஞ்சார காலத்தில், அதன் பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே நினைத்த காரியம் நிறைவேறும். தன ஸ்தானம் புனிதமடைவதால் தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் புதியவர்களை பங்கு சேர்த்துக்கொள்வீர்கள். பழைய தொழிலை கொடுத்து விட்டு ஒருசிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வாகன மாற்றங்கள் செய்வதில் துரிதமாகச் செயல்படுவீர்கள். புதிய வாகனங்கள் வாங்கி பயணிக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்டபடியே இடமாற்றங்களும், இலாகா மாற்றங்களும் கிடைக்கும்.

குருவின் வக்ர காலம்

16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் குரு பகவான் வக்ரம் பெறுவதால் உத்தியோகத்தில் கொஞ்சம் கவனம் தேவை. மனஅமைதி குறையலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, மின்சாதனப் பொருட்களை மாற்றுவது போன்றவற்றின் மூலம் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ள இயலும். ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் வந்து அகலும்.

14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. பொதுவாக பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வரலாம். வாக்குவாதங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள், உங்கள் முடிவைக் கேட்டு செயல்பட மாட்டார்கள். அதனால் உங்களுக்கு கோபம் அதிகரிக்கும். முன்கோபத்தின் காரணமாக மனநிம்மதி குறையும். திட்டமிட்ட காரியங்கள் சில நடைபெறாமலும் போகலாம். பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். 5-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நல்லதல்ல. பிள்ளைகள் வழியில் சுபநிகழ்ச்சிகளில் தடை ஏற்படும். அவர்களின் உத்தியோக வாய்ப்புகள் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். சொத்துக்களால் பிரச்சினைகள் உருவாகலாம். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். ‘பல வேலைகள் பாதியில் நிற்கிறதே’ என்று கவலைப்படுவீர்கள். கடன் சுமை சங்கிலித் தொடர் போல கூடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மாற்று உத்தியோகத்திற்கு செய்த ஏற்பாடு மனக்கலக்கம் தரும். மேலிடத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். இதுபோன்ற காலங் களில் சனி பகவானுக்குரிய சிறப்பு தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவதோடு, இல்லத்து பூஜை அறையில் சனி கவசம் பாடி வழிபடுவது நல்லது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

14.4.2021 முதல் 3.6.2021 வரை மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரையான காலகட்டங்கள், செவ்வாய் - சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கமாட்டார்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். எனவே உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது. வரவு செலவுகளில் ஏமாற்றத்தைச் சந்திப்பீர்கள். தொழில் கூட்டாளிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். பண பரிவர்த்தனையால் சிக்கல்கள் உருவாகும். பல பணிகள் செய்ய இயலாமல் போகலாம்.

வளர்ச்சி தரும் வழிபாடு

புதன்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. இல்லத்து பூஜை அறையில் வாலில் மணி கட்டிய அனுமன் படம் வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபடுவது பலன் தரும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டு நல்ல பலன்களை இல்லம் தேடி வரவழைத்துக் கொடுக்கப் போகின்றது. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ் நிலை உருவாகும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. உடன்பிறப்புகளை நீங்கள்தான் அனுசரித்துச் செல்ல வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், கூடுதல் பொறுப்பும் கிடைக்கும். சனியின் வக்ர காலத்திலும், சனி- செவ்வாய் பார்வை காலத்திலும் கடன் சுமை கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். வழிபாட்டின் மூலம் நிலைமையை சீராக்கிக் கொள்ள இயலும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags