சென்னை: மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்கள் தனியார் மூலம் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் வயர் மேன், ஹெல்ப்பர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை தற்காலிக ஊழியர்களைக் கொண்டு நிரப்புவதும், அதன்பின்னர் அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படுவதும் வழக்கமாகும்.
இந்நிலையில் மின்வாரியத்தில் உள்ள 30,000 காலிப் பணியிடங்கள் தனியார் மூலம் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக மின்துறையில் இருந்து ஒவ்வொரு மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கும் ரூ.1.8 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அத்துடன் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் 20 பேரை தனியார் நிறுவனம் பணியமர்த்திக் கொள்ள அனுமதி அளித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள ஐ.டி.ஐ படித்த இளைஞர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.