தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டுத்தேர்வை நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ள பள்ளிக்கல்வித்துறை, தேர்வு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களை வைத்து, தேர்ச்சி வழங்குவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.