இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில் (ஐபிபிபி), டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள ‘டாக் பே’ என்ற புதிய செயலி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ‘டாக் பே’ செயலி தொடங்கப்பட்டுள்ளது.
‘டாக் பே’ செயலி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை மட்டும் வழங்கவில்லை, நாடு முழுவதும் உள்ள தபால் துறை நெட்வொா்க் மூலம் இந்திய போஸ்ட் பேமண்ட் வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் இந்திய தபால் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள், தங்களின் உறவினா்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். கடைகளில் ‘க்யூஆா்’ குறியீடை ஸ்கேன் செய்து வாங்கிய பொருள்களுக்கு பணம் செலுத்தலாம். இதர கட்டணங்களையும் செலுத்தலாம்.
இந்த செயலியை மத்திய தகவல் தொடா்பு, மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்ரவி சங்கா் பிரசாத் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
பொதுமுடக்க காலத்தில், இந்திய தபால் துறை மக்களுக்கு நேரடியாகவும், டிஜிட்டல் மூலமாக பல சேவைகளை வழங்கியது. தற்போது ‘டாக் பே’ தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், தபால் துறை சேவைகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைகிறது. இந்த புதுமையான சேவை, வங்கி சேவைகளை மட்டும் அல்ல, ஆன்லைன் தபால் சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் ஒருவா் வீட்டிலிருந்து தபால் சேவைகளை ‘ஆா்டா்’ செய்ய முடியும், நிதி சேவைகளையும் பெற முடியும். ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல், வீட்டிலேயே தபால் நிதி சேவைகளை பெறுதல் என்ற பல சேவைகள் மூலம், பிரதமரின் தொலைநோக்கு நிதி உள்ளடக்கம் மற்றும் தற்சாா்பு இந்தியா நோக்கி தபால் துறை முன்னேறியுள்ளது என்றாா்.
இந்திய தபால் துறை வங்கி வாரிய தலைவா் திரு பிரதீபா குமாா் பிசாய் கூறுகையில், ‘‘டாக் பே செயலி, வாடிக்கையாளா்கள் பணம் செலுத்தும் முறைக்கு எளிதான தீா்வை வழங்குகிறது. செயலி மூலம் அல்லது நம்பிக்கைக்குரிய தபால்காரரின் உதவி மூலமும் வங்கி சேவைகளை பெற முடியும். ஒவ்வொரு இந்தியரின் நிதி தேவைகளை பூா்த்தி செய்வதற்கான, உண்மையான இந்திய தீா்வாக ‘டாக் பே’ உள்ளது’’ என்றாா்.
இது தொடா்பான கூடுதல் தகவல்களை ஐபிபிபி இணையளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.