குடிநீர் தட்டுப்பாடு என்பது நாடு முழுவதும் உள்ள பிரச்னை அந்த குடிநீர் வீணாவதை விசில் மூலமாகத் தீர்த்து வைத்த தனியார்ப் பள்ளி ஆசிரியரைப் பாராட்டும் பொதுமக்கள்.
நாள்தோறும் குடிநீருக்காகப் பெண்கள் குழாயடியில் காத்திருப்பதும் நேரம் கெட்ட நேரத்தில் தண்ணீர் வருவதும், குடிநீர் ஏற்றும் நிலையத்தில் ஏற்படும் கோளாறு, குடிநீர் குழாய் உடைப்பு என குடிநீர் எப்போது வரும் என தெரியாமல் தவித்து வந்தவர்களுக்கு விசில் மூலமாக தீர்வு கண்டுள்ளார். கந்தர்வகோட்டை அருகில் உள்ள அன்டனூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி ஆசிரியர் பாலமுருகன்.
இது பற்றி அவர் தெரிவித்து.
எங்கள் ஊரில் குடிநீர் எப்போது திறந்துவிடப்படும் என்பது உறுதியாக தெரியாது, ஒரு சில நாள்கள் விடியல் காலை 3 மணிக்கு கூட குடிநீர் வரும், அப்போது தூக்கத்திலிருக்கும் கிராம மக்களுக்கு இது தெரியாது, காலையில் எழுந்து பார்த்தால் குழியில் தண்ணீர் நிரம்பி குட்டை போல் காட்சியளிக்கும். இதனை எவ்வாறு தடுக்கலாம் குடிநீரைச் சேமிக்கலாம் என யோசித்தப் போது தோன்றியது தான் குடிநீர் குழாயில் விசில் பொருத்தும் யோசனை தோன்றியது.
பொதுவாகவே தண்ணீர் குழாயில் குடிநீர் வருவதற்கு முன்பாகவே காற்று வரும் அப்படி காற்று வரும் போது இதனை கொண்டு குழாயில் விசில் ஒன்றைப் பொருத்தினேன் காற்றின் மூலமாக விசில் குடிநீர் வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பகவே விசில் அடிக்கின்றது, வீட்டிலிருப்பவர்கள் எழுந்து குடிநீரினை பிடிப்பதால் தண்ணீர் வீணாவதும், குடிநீர் பிடிக்காத ஏமாற்றத்தையும் தவிர்க்கமுடியும். மேலும் இந்த முறையைப் பின்பற்றி குடிநீர் வீணாவதைப் பொதுமக்கள் தடுக்கலாம் என்கிறார் ஆசிரியர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.