மாணவ - மாணவியரின் ரத்தப்பிரிவு விபரம் சேகரிப்பு
பள்ளிகளில், மாணவ - மாணவியரின் ரத்தப் பிரிவு விபரங்களை சேகரிக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் சூழலால், எட்டு மாதங்களுக்கு மேலாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடத்தப்படுகின்றன. வகுப்புகள் நடக்காவிட்டாலும், மாணவ - மாணவியரை சார்ந்த நிர்வாக பணிகளை, கல்வி துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி, மாணவ - மாணவியரை பற்றிய முழு விபரங்களில் பிழைகள் நீக்கப்பட்டு, கல்வி மேலாண்மை மின்னணு தளத்தில், பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
அதோடு, அனைத்து மாணவ - மாணவியரின் ரத்தப் பிரிவு விபரங்களை சேகரித்து, மின்னணு தளத்தில் பதிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், இந்த விபரங்கள் பெறப்படுகின்றன.
மாணவ - மாணவியருக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போது, ரத்தப் பிரிவை தெரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், முன்கூட்டியே, அவர்களின் ரத்தப்பிரிவு தகவல்கள், 'டிஜிட்டல்' முறையில் பதிவு செய்யப்படுகின்றன. ரத்தப்பிரிவை பதிவு செய்யும்போது, மாணவர்கள் வாய்மொழியாக கூறும் தகவல்கள் தவறாக இருக்கலாம் என்பதால், ரத்தப் பிரிவை கண்டறியும் சோதனை அறிக்கையை சேகரிக்க, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா பரவல் சூழலால், எட்டு மாதங்களுக்கு மேலாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடத்தப்படுகின்றன. வகுப்புகள் நடக்காவிட்டாலும், மாணவ - மாணவியரை சார்ந்த நிர்வாக பணிகளை, கல்வி துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி, மாணவ - மாணவியரை பற்றிய முழு விபரங்களில் பிழைகள் நீக்கப்பட்டு, கல்வி மேலாண்மை மின்னணு தளத்தில், பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
அதோடு, அனைத்து மாணவ - மாணவியரின் ரத்தப் பிரிவு விபரங்களை சேகரித்து, மின்னணு தளத்தில் பதிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், இந்த விபரங்கள் பெறப்படுகின்றன.
மாணவ - மாணவியருக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போது, ரத்தப் பிரிவை தெரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், முன்கூட்டியே, அவர்களின் ரத்தப்பிரிவு தகவல்கள், 'டிஜிட்டல்' முறையில் பதிவு செய்யப்படுகின்றன. ரத்தப்பிரிவை பதிவு செய்யும்போது, மாணவர்கள் வாய்மொழியாக கூறும் தகவல்கள் தவறாக இருக்கலாம் என்பதால், ரத்தப் பிரிவை கண்டறியும் சோதனை அறிக்கையை சேகரிக்க, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.