1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 உணவுகள்: விவரங்கள் இதோ!

 பூண்டு, நெல்லி, தேன், துளசி ஆகிய உணவுப் பொருட்களை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நமக்கு இயற்கை நிறைய உணவுகளை கொடுத்துள்ளது. அவற்றை சரியான அளவில் உட்கொண்டாலே நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். அதில் சில உணவுப் பொருட்களை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். அப்படிப்பட்ட 4 உணவுகள் என்ன என்பதையும், அதன் பயன்களையும் தற்போது பார்ப்போம். 

பூண்டு:

Garlic
இதில் இயற்கையிலேயே நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, அதனால் ஆன்டிபயாடிக் போல் பயன்படுகிறது. தொற்றுநோயை எதிர்த்து போராடும் சக்தி பூண்டுக்கு உண்டு. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும், இதய ஆரோக்கியத்திலும் இது முக்கிய பங்காற்றுகிறது. நுரையீரல் சம்பந்தமான தொந்தரவு உள்ளவர்கள் பூண்டு சாப்பிடலாம். இதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, பல நோய்களில் இருந்து விலகியிருக்க உதவும். வெதுவெதுப்பான நீருடன் இதனை காலையில் சாப்பிடுங்கள்.

நெல்லி:

amla
நெல்லிக்காயை நறுக்கி, அதனை சூடான நீரில் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதில் அதிக அளவிலான வைட்டமின் சி காணப்படுகிறது. மேலும் ஆண்டிஆக்ஸிடெண்டுகளும் நிறைந்துள்ளன. இவை இரண்டும் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதுமட்டுமல்லாமல் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டு வர பளபளப்பான சருமத்தை பெறமுடியும். 

தேன்:


சுவையான, இனிப்பான தேன் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு பயன்படுகிறது. ஒரு டீஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். கூடுதல் சுவை மற்றும் வைட்டமின் சி சத்தையும் பெறுவதற்காக அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். இவை உங்கள் உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. மேலும் இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களில் இருந்து உங்கள் உடலை பாதுகாப்பதற்கும் உதவும். 

துளசி:


துளசி இலைகளை தண்ணீரில் போட்டு வைத்து இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். அதன்பிறகு மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் பருகுங்கள். தொற்றுநோய்களை எதிர்த்து போராடுவதில் துளசி முக்கிய பங்கு வகிக்கிறது. இருமல், காய்ச்சல் தொந்தரவுகளில் இருந்து விடுபடவும் துளசி பயன்படுகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. அதனால் தினமும் துளசி நீர் அருந்தி பயன்பெறுங்கள்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags