1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

உஷ்ணம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் சூரணம்

உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த துத்திக் கீரை சீரகச் சூரணத்தைத் தினமும் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். 

தேவையான பொருட்கள்

துத்திக்  கீரை  ( நிழலில் உலர்த்தியது)  - 500 கிராம்  

            சீரகம்.              -   25  கிராம்

மிளகு.             -   10  கிராம்

மஞ்சள்.            -  10  கிராம்

செய்முறை

முதலில்  துத்திக் கீரையை ஆய்ந்து எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அதனை நிழலில் நன்கு உலர வைக்கவும். சீரகம் மற்றும் மிளகைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும். மஞ்சளைத் தூளாக்கிக் கொள்ளவும். பின்பு நன்கு உலர்ந்த துத்திக் கீரையுடன் சீரகம், மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்து ஒன்றாக கலக்கி அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.


பயன்கள்


இந்த  சூரணம் மூல நோய்களை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். மேலும் உஷ்ணம் சார்ந்த குறைபாடுகள் அனைத்தையும் நீக்க உதவும் மருந்தாகவும் உணவாகவும் இருக்கும். மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை மற்றும் இரவு என இருவேளையும் தலா 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்

பிட்ட பின்பு குடித்து வரவும்.மேற்கூறிய சூரணம்  துணை உணவாக பயன்படக்கூடியது. நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்


வெற்றிலை (2),

மிளகு(2) ,

உலர் திராட்சை (5)

இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.


குறிப்புஅனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.-

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags