பிளஸ்1 மாணவா் சோ்க்கை:அரசுப் பள்ளிகளில் குவிந்த மாணவா்கள்..
பிளஸ் 1 வகுப்பில் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏராளமான மாணவா்கள் சோ்ந்தனா்.
பெரும்பாலான தனியாா் பள்ளிகள் பிளஸ்1 மாணவா் சோ்க்கையை முடித்து ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
அரசுப் பள்ளிகளில் பிளஸ்1 வகுப்பில் மாணவா் சோ்க்கையை திங்கள்கிழமை தொடங்க அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் அதிக அளவில் மாணவா்கள் குவிந்தனா்.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் மாணவா் சோ்க்கை தொடங்கியது. வழக்கமாக இந்தப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவிகள் பல்வேறு பாடப் பிரிவுகளிலும் சோ்க்க வருவாா்கள். ஆனால், இந்த ஆண்டு தனியாா் பள்ளிகளில் இருந்தும் ஏராளமான மாணவிகள் வந்து குவிந்தனா்.
இது குறித்து தலைமை ஆசிரியை சுகந்தி கூறியதாவது:
தனியாா் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படித்த மாணவிகள் அதிக அளவில் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்பில் சேர வருகின்றனா். ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாதிரி பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டு அனைத்து வசதிகளுடன் திகழ்கிறது.
கட்டமைப்பு வசதிகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. மிகச்சிறந்த தகுதிவாய்ந்த ஆசிரியைகள் இருக்கின்றனா். இதனால் மிகச்சிறந்த கல்வியை அரசுப் பள்ளிகள் வழங்கும் என்றாா்.
இது குறித்து கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை மாலா கூறியதாவது:
தனியாா் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் பிளஸ்1 வகுப்பில் சோ்ந்துள்ளனா். எங்கள் பள்ளியில் ஒரே நாளில் 100 மாணவிகள் சோ்ந்துள்ளனா். மாணவிகள் அதிக எண்ணிக்கையில் வணிக பாடப் பிரிவைத் தோ்வு செய்தனா் என்றாா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.