ஜி.எஸ்.டி.,க்கு முந்தைய வரியை ஒப்பிடுகையில், ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தப்பட்ட பிறகு வரி குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்கள் வரி செலுத்த வேண்டிய விகிதத்தை ஜிஎஸ்டி குறைத்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு இன்றியமையாதது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்திய வரிவிதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களில் ஜிஎஸ்டி, வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கூந்தல் எண்ணெய், பற்பசை மற்றும் சோப்பு போன்ற பொது பொருள்களின் வரி விகிதங்கள் ஜி.எஸ்.டி.க்கு முந்தைய காலத்தில் 29.3 சதவீதத்தில் இருந்து ஜி.எஸ்.டி.யில் 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. தினமும் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீதான வரி பெரும்பாலும் பூஜ்யத்தில் இருந்து 5% ஆக உள்ளது. அதே நேரத்தில் அரிசி, கோதுமை, மாவு, இயற்கை தேன் ஆகியவை மீதான ஜி.எஸ்.டி ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் வகைகள் மீதான ஜி.எஸ்.டி 6 லிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.