கல்லூரி இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது என பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி தெரிவித்துள்ளது.
இறுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், யுஜிசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: கல்லூரி இறுதித்தேர்வை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. தேர்வு கிடையாது என்பது மாணவர்களின் நலனுக்கான அறிவிப்பாக இருக்க முடியாது. கல்லூரி இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். தேர்வுகள் எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது.
மஹாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநில அரசுகள் விதிகளை மீறி தானாக தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.விதிமீறல் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார். பின்னர் இந்த வழக்கு, ஆக., 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.