தமிழக அளவில் 12,690 பள்ளிகளில் படித்த 9,39,829 மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) படி 9,45,077 மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிப்பதாக கணக்கில் உள்ளது.
இதனால், முடிவு அறிவித்த மீதியுள்ள 5,248 மாணவரின் முடிவுகள் என்ன ஆனது என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு தேர்வு துறை துணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தினர். அதில், 5248 பேர்களில் 231 இறப்பு, 4359 காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர், பள்ளியை விட்டு 658 பேர் விலகியது தெரிந்தது.
பள்ளியை விட்டு மாணவர் இடைநிற்றல், இறப்பு, மாற்று சான்றினை பெற்று விலகினால், அவர்களது விபரங்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) இருந்து உடனே நீக்க வேண்டும். பள்ளிகள் அதை செய்யாததால் குழப்பம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.