தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த பொதுத்தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:30 மணிக்கு வெளியானது. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in இணையதளங்களில் முடிவுகளை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9.45 லட்சம் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது,
மாணவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 17 முதல் 21 ஆம் தேதி வரை, பள்ளிகளில் வழங்கப்படும். மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.