10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 5,248 மாணவர்களின் விவரங்கள் விடுபட்டது ஏன் என்பதற்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்.13 வரை நடைபெற இருந்தது. இத்தேர்வை 9,45,077 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனர். இதற்கிடையே கரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் முந்தைய பருவங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், மொத்தமாக 9,39,829 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள 5,248 மாணவர்களின் விவரங்கள் விடுபட்டது ஏன் என்று கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ''விடுபட்ட 5,248 மாணவர்களில் 231 மாணவர்கள் இறந்துவிட்டனர். 658 மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு இடைநின்றவர்கள் ஆவர்.
மீதமுள்ள 4,359 மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு எழுதாதவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு முழுமையாக வராதவர்கள்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.