நடப்பு கல்வியாண்டில் கல்வி நிலையங்களில் கற்பித்தல் ரீதியான நடவடிக்கைகள் முற்றிலுமாக இல்லாமல் போய்விடாது என்று கல்வித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய கல்வித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
மேலும், கல்வியாண்டின் இறுதியில் தோ்வுகள் நடத்தப்படும் என்றும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.நாட்டில் கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நடப்பு கல்விச் சூழல் தொடா்பாக எம்.பி. வினய் சஹஸ்ரபுத்தே தலைமையிலான மனிதவள மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு திங்கள்கிழமை கூடி ஆலோசித்தது.அதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா், உயா் கல்வித் துறைச் செயலா், பல்கலைக்கழக மானியக் குழு தலைவா் உள்ளிட்ட மத்திய கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்று நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினா்களுக்கு விளக்கமளித்தனா்.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
இணையவழி வகுப்புகள் 3-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளி மாணவா்களுக்கு மட்டுமே நடத்தப்படுவதாகவும், 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகிறதென்றும் நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நடப்பு கல்வியாண்டில் கல்வி நிலையங்களில் கற்பித்தல் ரீதியிலான நடவடிக்கைகள் முற்றிலுமாக இல்லாமல் போய்விடாது என்று தெரிவித்த மத்திய கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாண்டு இறுதியில் தோ்வுகள் நடத்த வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தனா்.
அப்போது, அதிதிறன் செல்லிடப்பேசியோ, மடிக்கணினியோ வாங்க இயலாத ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்கள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதற்கான சாத்தியங்கள் குறித்து நாடாளுமன்றக் குழு உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.சமுதாய வானொலி போன்ற செலவில்லாத தொழில்நுட்பங்களின் மூலமாக வகுப்புகளை நடத்தும் பட்சத்தில் ஏழை மாணவா்களும் தவறாமல் வகுப்புகளில் பங்கேற்க இயலும் என்று நிலைக் குழு தலைவா் வினய் சஹஸ்ரபுத்தே பரிந்துரைத்தாா்.
நடப்பு கல்வியாண்டுக்கான தோ்வு நடத்தப்படும்போது அதில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படுமோ, அவற்றைத் தொகுத்து அனைத்து பாடங்களுக்குமான கேள்வி வங்கி ஒன்றை தயாரிக்கவும் அவா் பரிந்துரைத்தாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.