கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்பு பாடங்கள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 1 முதல் 10-ம் வகுப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை அனைத்து பள்ளிகளிலும் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானது. தேர்வு முடிவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்தகட்டமாக பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான சேர்க்கை இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் என்று அரசு அறிவித்து இருந்தது.
அனைத்து பள்ளிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.