தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்கள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, இன்று கடைசி நாள்.
தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்தில் செயல்படும், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, உயர்கல்வித் துறை சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதற்கான ஆன்லைன் பதிவு, ஜூலை, 15ல் துவங்கி, ஆக., 16ல் முடிந்தது.கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களின் பிரதிகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, ஆக., 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பல்வேறு பாட திட்டங்களில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவும், சில பாட திட்டங்களில் சான்றிதழ்களும் வரவேண்டியிருந்தது.
இதன் காரணமாக, சான்றிதழ் பதிவேற்றத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம், இன்றுடன் முடிகிறது.'கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்கள், இன்று மாலை, 5:00 மணிக்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்' என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.