கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 7ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தெரிவித்துள்ளது. அதே சமயம், சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, மார்ச், 25 முதல், ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. பயணியர் ரயில்கள், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள், நாடு முழுதும் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கும் என உத்தரவில் தெரிவித்துள்ளது. அதே சமயம் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.