SMS கட்டணம் ரத்து செய்தது SBI
மாத சராசரி இருப்புத் தொகை இல்லாததற்கான கட்டணம், எஸ்.எம்.எஸ்., சேவைக்கான கட்டணம் ஆகியவற்றை, வாடிக்கையாளர்கள் இனி செலுத்த தேவை இல்லை' என, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அதன் குறைந்தபட்ச இருப்புத் தொகையை, மாதம்தோறும் வைத்திருக்க வேண்டும். இந்த தொகை, வங்கிகளுக்கேற்ப மாறுபடும்.எஸ்.பி.ஐ., வங்கி வாடிக்கையாளர்கள், பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்போர், 3,000 ரூபாய்; நகர்ப்புறங்களில், 2,000 ரூபாய்; ஊரகப்பகுதிகளில், 1,000 ரூபாய், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
தற்போது, மாத சராசரி இருப்புத் தொகை, எஸ்.எம்.எஸ்., சேவைக் கட்டணம் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது.எஸ்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்ணிற்கு, பணம் எடுத்தல், செலுத்துதல், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்பாடு என, அனைத்து பயன்பாட்டிற்கும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக, 'அலர்ட்' தகவல் அனுப்பப்படும்.இதற்கு, 12 ரூபாய் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். இது, கணக்குகளுக்கேற்ப மாறுபடும்.இதே போல, மாத சராசரி இருப்புத் தொகை இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில், குறைந்த பட்சம், 5 ரூபாய் முதல், அதிகபட்சம், 15 ரூபாயுடன், ஜி.எஸ்.டி., யும் சேர்த்து வசூலிக்கப்படும். இந்த கட்டணமும் கணக்குகளுக்கேற்ப மாறுபடும்.தற்போது, இந்த இரண்டு கட்டணங்களையும், வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை; கட்டணமில்லா சேவையை இனி பெறலாம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.