பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணை தேர்வில், யார் யார் பங்கேற்கலாம் என்பதை, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பில், மார்ச் தேர்வு எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்கள், செப்டம்பரில் நடக்கும் துணை தேர்வு எழுத, மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. பிளஸ் 1ல் மார்ச், 26ல் ரத்து செய்யப்பட்ட, வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் மற்றும் தொழிற்கல்வி கணக்கு பதிவியல் பாடங்களுக்கு விண்ணப்பித்திருந்த தனி தேர்வர்கள் மட்டும், செப்டம்பர் துணை தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.'ஆன்லைனில்'மேற்கண்ட பாடங்கள் தவிர, வேறு பாடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.மார்ச் பொது தேர்வில் விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு நடக்க உள்ள தேர்வில் பங்கேற்கலாம்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வை, பள்ளி மாணவர்களாக எழுதி, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.இந்த அடிப்படையில், துணை தேர்வுக்கு, வரும், 24ம் தேதி முதல், 27 வரை விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் வழியாக, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்.பத்தாம் வகுப்பில், ஏற்கனவே அறிவியல் செய்முறை பயிற்சி முடித்து, பொது தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், துணை தேர்வில் பங்கேற்க விரும்பினால், மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம்விண்ணப்பம் பதிவு செய்யப்படும் சேவை மையங்களின் விபரங்கள் மற்றும் தேர்வு குறித்த தகவல்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.சட்டசபைமேலும், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம். தேர்வு ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள, விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.தத்கல் திட்டம்வரும், 24ம் தேதி முதல், 27 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாதவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில், வரும், 28 மற்றும், 29ம் தேதிகளில், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்.பத்தாம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணமாக, 500 ரூபாய்; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2க்கு, 1,000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
பழைய 'சிலபஸ்' கடைசி தேர்வு!பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வை, பழைய பாடத்திட்டத்தில் எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத, செப்டம்பர் துணை தேர்வே இறுதி வாய்ப்பாகும். இந்த தேர்வில், பழைய பாடத் திட்டத்திலேயே பங்கேற்கலாம்.ஓர் ஆண்டுக்கு முன், நேரடி தனி தேர்வராக, பிளஸ் 1 தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாத அனைவரும், பிளஸ் 2 பொது தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும், ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.